செந்தமிழ்சிற்பிகள்

கா. சிவத்தம்பி (1932 - 2011)

கா. சிவத்தம்பி (1932 - 2011)

அறிமுகம்

கார்த்திகேசு சிவத்தம்பி ஒரு முக்கிய தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ஆவார்.

கல்வியும் கல்விப்பணியும்

யாழ்ப்பாணம் கரவெட்டி மேற்கில் பிறந்த சிவத்தம்பி ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு சாகிரா கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் 1956 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராகவும், 1961 முதல் 1965 வரை இலங்கை நாடாளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். இலங்கையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

பல்கலைக்கழகப் பணி

1965 முதல் 1970 வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1970 முதல் 1975 வரை விரிவுரையாளராகவும், 1976 முதல் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.

கலைப் பங்களிப்பு

பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய "விதானையார் வீட்டில்" தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

இவருடைய நூல்கள்

இலக்கணமும் சமூக உறவுகளும், இலக்கியத்தில் முற்போக்குவாதம்; 1977, இலக்கியமும் கருத்துநிலையும்; 1982, இலங்கைத் தமிழர் - யார், எவர்?, ஈழத்தில் தமிழ் இலக்கியம்; 1978, சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள், பண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி; மக்கள் வெளியீடு பரணிடப்பட்டது, மதமும் கவிதையும், தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்; 1967, தமிழில் இலக்கிய வரலாறு, தமிழ் கற்பித்தலில் உன்னதம் பரணிடப்பட்டது, தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்; தமிழ்ப் பண்பாட்டில் சினிமா; மக்கள் வெளியீடு, தனித்தமிழிலக்கியத்தின் அரசியற் பின்னணி; 1979,

பதிப்பித்த நூல்கள்

  • இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல் (1980)
  • மார்க்கண்டன் வாளவிமான் நாடகம் (1966)